Saturday, 13 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை மிக அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் ராதிகா தூத்துக்குடியில் பேட்டி

Last updated: June 8, 2026 9:02 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தவெக மேற்கு பகுதி துணை செயலாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் தவெக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவாக இருக்கும் சரவணனின் வெற்றிக்காக பாடுபட்டுள்ளார்

இந்நிலையில் கடந்த மே மாதம் 3ம் தேதி இளம் பெண்ணை வேலை வாங்கித் தருவதாக கூறி தவெக நிர்வாகியான ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலா என்ற பாலமுருகன் மற்றும் ராம்நாடு பகுதியைச் சேர்ந்த ஜெயபால் ஆகிய இருவரும் பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் மற்றொரு பெண்ணை காரில் அழைத்து சென்றுள்ளனர். அப்போது காரில் செல்லும் போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை ஏர்வாடி அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட இளம்பெண் தவெக நிர்வாகிகள் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் தவெக நிர்வாகிகள் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரை கைது செய்தனர் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் ராதிகா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த பெண்ணை தவெக நிர்வாகிகள் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவருக்கும் கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகளுக்கு ஆதரவாக சரவணன் எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் உள்ளிட்ட மிரட்டல் விடுத்து வருகின்றனர் மேலும் அந்த பெண் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவே காவல்துறை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் எம்எல்ஏ மீது புகார் வந்துள்ள நிலையில் காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் விஜய் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை மிக அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது உடனடியாக தமிழக அரசாங்கம் காவல்துறையை கையில் வைத்திருக்கிற தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வளவு மோசமாக சம்பவங்கள் நடப்பதற்கு காரணமாக இருப்பது போதை என்பது குறிப்பாக டாஸ்மாக் கடைகள் ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என்று கூறினார்கள் ஆனால் பல்வேறு பகுதிகளில் இன்னும் மது கடைகள் மூடப்படவில்லை திறந்திருப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள் எனவே போதையை தடுத்து நிறுத்த வேண்டும் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் தற்போது ஒரு மணி நேரத்துக்கு முன்பு கூட திருச்சியில் 13 வயது சிறுமி பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார் இதில் 7 சிறார்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் இது வந்து தமிழகத்தில் சொல்ல முடியாத அளவிற்கு குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருவதை கவலையோடு பார்க்கிறோம் இதே கவலையோடு தமிழக முதலமைச்சர் விஜய் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முந்தைய தினம் தன்னை பாலமுருகன் ஜெயபால் ஆகியோர் வேலை வாங்கி தருவதாக காரில் அழைத்துச் சென்றனர் அப்போது அவர்கள் காரில் செல்லும்போது தனக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அதிக அளவில் கொடுத்து என்னை ஏர்வாடி அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஜெயபால் ஆகியோர் கூட்டு பாலியல் செய்தார்கள் என தெரிவித்த அவர் இது தொடர்பாக வெளியே கூறினால் தமிழக முதல்வர் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு தான் கெட்ட பெயர் ஏற்படும் எனவே இது தொடர்பாக புகார் அளிக்கக்கூடாது என மிரட்டினர் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நான் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் இதில் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் கைது செய்யப்படும் போது கேரளாவில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணனுக்கு சொந்தமான இடத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் தண்டனை வழங்க வேண்டும் இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வரான விஜயை சந்தித்து புகார் தெரிவிக்க செல்லும் போது தன்னை சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுத்துவிட்டனர் மேலும் அமைச்சர் ஆதவ்அர்ஜுனா மற்றும் புஸ்ஸிஆனந்த் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளேன் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை தொடர்ந்து புகாரை வாபஸ் வாங்க வலியுறுத்தி சரவணன் எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை மிரட்டி வருவதாகவும் மேலும் தனது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்தார் இந்த சம்பவத்தில் தன்னுடன் வந்த ஒரு பெண்ணையும் என்னை கூட்டு பாலியல் செய்தது போன்று அந்த பெண்ணையும் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் குளிர்பானம் கொடுத்து கூட்டு பாலியல் செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் தெரிவித்தார் பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய குடும்பச் சூழ்நிலை கருதி இந்த சம்பவத்தில் புகார் அளிக்காமல் இருந்து வருவதாகவும் காவல்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் கூறினார். மேலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் புகார் அளித்த தன்னை கட்சியை விட்டு நீக்கி உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மூத்த குடிமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கச் சிறப்பு உாிமை ஆணையம் அமைக்க அமைச்சர்களிடம் கோாிக்கை
Next Article முதல்வர் விஜய்யால் மட்டுமே தமிழகத்தை முன்னேற்ற முடியும். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த வக்கீல் மந்திரமூர்த்தி பேச்சு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சித்தா் பீடத்தில் அஷ்டமி பூஜை நடைபெற்றது

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர் 34 வது வார்டு திமுக பாக முகவர் சேர்மத்துரை அவரது மனைவி சரோஜா சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சரோஜா உயிரிழப்பு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆறுதல் கூறி உதவிகளை செய்தார்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் மோடி அரசு – 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல் – பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா பிள்ளை வாழ்த்து

By Tamilagapuratchi
அரசியல்திருநெல்வேலிதூத்துக்குடி

ஆலங்குளம் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மணிகண்டனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரிப்பு

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?