தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலரும் அதிமுக ஐடி லிங்க் மண்டல நிர்வாகியுமான வக்கீல் மந்திரமூர்த்தி தலைமையில் வக்கீல்கள் பசும்பொன் ராஜா. சுபாஷினி முன்னாள் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர். இப்ராஹிம். பிரியதர்ஷினி. ஐயப்பன். குமரேசன். மஞ்சு. கௌதம். முருகன். அருண்குமார். பேச்சுத்துறை நித்யா உள்பட 200-க்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் மாநகராட்சி அதிமுக எதிா்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி தலைமையில் தவெக மத்திய மாவட்ட செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்த அவர்களை மாவட்ட செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்த மந்திரமூர்த்தி பேசுகையில் இன்று முதல் நான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளேன் தமிழகத்தில் தற்போது உள்ள தலைவர்களில் ஒரே தலைவர் தமிழக முதலமைச்சர் விஜய் மட்டும் தான் நல்ல தலைவராக உள்ளார் கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. எல்லா கட்சியும் தமிழகத்தில் முடிந்து விட்டது இனி ஒரே கட்சி தான் அதுவும் தமிழக வெற்றி கழகம் தான். தமிழகத்தை காப்பாற்ற தமிழக முதல்வர் விஜய்யால்தான் முடியும் மக்களுக்கு நல்ல திட்டங்களையும் செய்ய முடியும். அதனால்தான் அதிமுகவில் இருந்து விலகி பல்வேறு வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளேன் என்று வக்கீல் மந்திரமூர்த்தி கூறினார்.
கட்சியில் இணைந்தவா்களை வரவேற்று மாவட்ட செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் பேசுகையில் அதிமுகவில் இருந்து விலகிய வக்கீல் மந்திரமூர்த்தி நிறைய இளைஞர்களை தமிழக வெற்றி கழகத்தின் சேர்த்துள்ளார் குறிப்பாக படித்தவர்களை சேர்த்துள்ளார். மாநகராட்சி கூட்டத்தில் மக்களின் பல்வேறு பிரச்சனைக்காக குரல் கொடுத்தவர் வக்கீல் மந்திரமூர்த்தி. தமிழக வெற்றி கழகத்தில் மந்திரமூர்த்தி சேர்ந்தது கட்சிக்கு மேலும் வலுப்பெறும். தமிழக முதலமைச்சர் தூத்துக்குடியில் பல்வேறு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு மூடப்பட்டுள்ளது அதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடியில் பல்வேறு தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது இது தொடர்பாக மாநகராட்சி ஆணையருடன் பேசி உள்ளேன் விரைவில் அதனை சரி செய்வதாக ஆணையர் கூறியுள்ளார். இந்தக் கட்சியில் வழக்கறிஞர்கள் நிறைய பேர் இணைந்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது என்று மாவட்டச் செயலாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜு கூறினார்.
தவெகவிற்கு தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரு கவுன்சிலா் தற்போது கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருவது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.