டாஸ்மார்க் கடைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சில நபர்கள் மீது ஏற்கனவே கஞ்சா, போக்சோ, திருட்டு, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சில குடும்ப உறுப்பினர்கள் சிறையில் உள்ளதாகவும், அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் தற்போது பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
மேலும், 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கும் சாயர்புரம் காவல் நிலைய வரம்பில் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில ரவுடி நபர்களை பயன்படுத்தி பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, சாயர்புரம் பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மார்க் கடைகளில் ஒரே ஒரு பாரை மட்டும் குறிவைத்து தொடர்ந்து புகார்கள் அளித்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பின்னால் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மேலும், ஜனிட்டா என்ற பெண்ணை குறித்து பல்வேறு சர்ச்சைகள் பேசப்படுகின்றன. ஜாதி மற்றும் மத வெறியை தூண்டும் வகையிலான செயல்களில் ஈடுபடுகிறார் என்றும், மிரட்டல் மற்றும் பணம் கேட்டு அழுத்தம் தரும் செயல்களில் தொடர்பு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அதேபோல், கஞ்சா வியாபாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளும் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளன. குடும்ப அடிப்படையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
சட்டத்தை முன்வைத்து தொடர்ந்து ஒரே டாஸ்மார்க் கடையை குறிவைத்து அழுத்தம் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. உண்மை நிலையை காவல்துறை முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.