தூத்துக்குடி தமிழக 17வது சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு மாற்றத்தை எதிர்நோக்கிய மக்களின் நீண்டகால ஏக்கத்தை நிறைவேற்றுகிற அரசாக திகழ்ந்திட வேண்டும் போதை இல்லா தமிழகத்திற்கு பாதை வகுத்திட்ட புதிய அரசுக்கு சாலைப்பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சண்முகராஜா பாராட்டு தொிவித்து வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பிலும் சாலைப் பணியாளர்கள் பத்தாயிரம் குடும்பங்களின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பொதுமக்களுக்கு இருநூறு யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்திட சிங்கப் பெண் சிறப்பு காவல் படைஅமைப்பு, போதைப் பொருட்கள் தடுப்புப் படைஅமைத்திடல், என முத்தான மூன்று திட்டங்களில் தனது முதல் கையெழுத்தை முத்திரை பதித்து தமிழக மக்களின் இதயத்தில் பால் வார்த்துள்ளது பாராட்டத்தக்கது. மேலும் தமிழகம் முழுவதும் எழுநூற்றுபதினேழு மதுக்கடைகளை மூட உத்தரவிட்டு போதை இல்லா தமிழகத்திற்கு பாதை வகுத்திட்ட புதியஅரசுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல பல்வேறு நீண்டகால கோரிக்கைகளுக்கான தீர்வுக்கான எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு புதிய அரசு தீர்வு ஏற்படுத்தித்தரும் என்று நம்புகிறோம். இவ்வாறு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் சண்முகராஜா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.