தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும் அதிமுக அமைப்புசாரா ஓட்டுநரணி மாவட்ட தலைவருமான சுதாகா் அக்கட்சியிலிருந்து விலகி சென்னையில் தவெக பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சருமான புஸ்சி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா். அப்போது முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜு, திருச்சிற்றம்பலம், ஆகியோா் உடனிருந்தனா்.
கடந்த சட்டமன்ற தோ்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக சுதாகா் தான் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்த்தனா். ஆனால் திடீரென முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.