தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகள் உள்ளது ஆரம்ப பள்ளி. நடுநிலைப்பள்ளி. உயர்நிலைப்பள்ளி உள்ளது இந்த மாநகராட்சி பள்ளிகள் எல்லாம் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து வசதிகளும் உள்ளதால் மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டு காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு சார்பில் மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு. புத்தகம். ஸ்கூல் பேக். யூனிபார்ம். உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவே வழங்கப்படுகிறது ஆனால் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஜின் பேக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளிடம் ஒவ்வொரு வகைகளை கூறி ஐம்பது ரூபாய் முதல் 300 ரூபாய் வரை ஒவ்வொரு மாணவ மாணவிகளிடமும் பள்ளி நிர்வாகம் பண வசூல் செய்கிறது பள்ளியில் படிக்கும் மாணவனின் 6 பெற்றோர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனா். ஆனால் அந்த புகார் மீது மாநகராட்சி ஆணையர் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை இந்த குற்றச்சாட்டு பள்ளியில் படிக்கும் மாணவனின் பெற்றோர்கள் கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர் அதுபோல பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றாலும் மாணவ மாணவிகளிடம் பணம் வசூலிக்கப்படுகிறது ஆனால் இந்த பணங்கள் எல்லாம் எந்த வகைக்கு செலவு செய்யப்படுகிறது என்று தெரியவில்லை சில வாரங்களுக்கு முன்பு ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா பெற்றது விழாவிற்கு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளிடம் பணம் வசூல் செய்யப்பட்டது என்று பள்ளியில் படிக்கும் மாணவனின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர் ஆகையால் மாநகராட்சி ஆணையர் உடனடியாக ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி பள்ளி நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவிகளிடம் பணம் வசூலிக்கும் நிலை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்