Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மக்கள் குடிதண்ணீருக்காக வல்லநாட்டில் அதிகாலையில் களத்தில் இறங்கிய மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் பிரியங்கா ஆய்வு

Last updated: August 5, 2026 10:14 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு வல்லநாடு ஆற்றுப்படுகையிலிருந்து அங்குள்ள பம்பிங் நிலையத்திலிருந்த குழாய்கள் மூலம் வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு தூத்துக்குடி மாநகரில் உள்ள 60 வார்டு பகுதி மக்களுக்கு 36 குடிநீர் நீர்தேக்க தொட்டி மூலம் சூழற்சி முறையில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வல்லநாடு ஆற்று படுகையில் இருந்து வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் வழியில் மெயின் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டு இருப்பதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் ப்ரியங்காவுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அதிகாலை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் பிரியங்கா மற்றும் மாநகராட்சி 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் முதலில் வல்லநாடு அகரம் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு சென்று அங்கு எவ்வளவு அளவு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட இரண்டாவது குடிநீர் பைப் லைன் பம்பிங் நிலையத்தையும் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார் அப்போது அங்கு இருந்த அதிகாரிகளிடம் பணிகளை விரைவாக ஒரு வார காலத்துக்குள் முழுவதும் முடிக்க வேண்டும் மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் பணிகளை தொடங்கஉள்ளேன். மக்களுக்கு வழங்க வேண்டும் முதல் கட்டமாக அனைத்து வார்டுகளுக்கும் தினசரி குடிநீர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார். அதன் பிறகு வல்லநாடு ஆற்று படுகையில் இருந்து நீர் எடுக்கப்பட்டு வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வழியில் மெயின் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு அருவி போல நீர் வெளியே சென்று கொண்டு இருந்தது அதனைப் பார்த்த மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் பிரியங்கா இவ்வளவு தண்ணீர் வெளியே சென்றால் மாநகர மக்களுக்கு எப்படி குடிநீர் சீராக கிடைக்கும் ஏன் இதனை பல நாள் பார்க்கவில்லை உடனடியாக சரி செய்வதற்கான நடவடிக்கை ஏன் மேற்கொள்ளவில்லை என்று அதிகாரிகளிடம் கேட்டனர் இந்த உடைப்பு எப்படி ஏற்பட்டது ஏதாவது வாகனங்கள் இடித்ததா என்ற விபரங்களையும் கேட்டறிந்தார். இதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் அதன் பிறகு வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்தை முழுவதும் சுற்றி ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அங்கு உள்ள குறைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு கடந்த சில வருடங்களாக வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்தில் சோலார் அமைக்கப்பட்டு வருகிறது அந்தப் பணிகள் தற்போது முடிவடைந்து பயன்படுத்தும் நிலையில் உள்ளது அதனை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டு அறிந்தார். சோலார் மூலம் எவ்வளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்ற விபரங்களையும் அங்கு இருந்த அதிகாரிகளிடம் கேட்டனர்.

அதன் பிறகு மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு வல்லநாடு பகுதியில் இருந்து நான்கு பைப் லைன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது தற்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது பைப் லைன் சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது தற்போது அதனை சரி செய்யும் பணிகள் நிறைவடையும் சூழ்நிலையில் உள்ளது இந்நிலையில் நாலாவது பைப் லைன் மெயின் லைன் உடைப்பு ஏற்பட்டிருப்பது 20 எம்எல்டி தண்ணீர் வரை வீணாக சென்றுள்ளது அதனை எவ்வாறு சரி செய்வது என்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது அதன்படி புதியதாக வாழ்வு மற்றும் பொருட்கள் வாங்கப்பட்டு எல்லா பொருட்களும் சரியான முறையில் சேகரிக்கப்பட்டு பனிமய மாதா கோவில் திருவிழா நடைபெறுவதாலும் பல்வேறு ஆலயங்களில் கோவில் கொடை விழா நடைபெற்று வருவதாலும் 6ம்தேதி வரை குடிநீர் வினியோகம் சீராக விநியோகம் செய்யப்பட்டு வரும்7ம் தேதி குடிநீர் வினியோகம் முழுவதும் நிறுத்தப்பட்டு நாலாவது பைப் லைன் உடைப்பு பணிகள் முழுவதும் 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட்டு அதன் பிறகு மாநகர மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் அதனால் ஏற்படுகின்ற சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் காலதாமதத்திற்கு மக்கள் அமைதியாக இருந்து அதன் பிறகு சீரான குடிநீர் எந்த விதமான தங்கு தடை இன்றி வினியோகம் செய்யப்படும் தூத்துக்குடி மாநகருக்கு 36 டேங்க் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தினசரி குடிநீர் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் அதன்படி தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படும் அதன் பின்பு படிப்படியாக 24 மணி நேர குடிநீர் விநியோகம் என்பது மாநகரில் அமல்படுத்தப்படும். அதுபோல வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்தில் மாநகராட்சி சார்பில் 1.2 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான சோலார் அமைக்கப்பட்டுள்ளது அந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்து ஒத்திகை பார்க்க பட்டு வருகிறது ஒரு நாளைக்கு 4500 முதல் 7200 யூனிட் வரை உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது மாநகராட்சி சார்பில் வல்லநாடு பம்பிங் ஸ்டேஷன் வல்லநாடு சுத்தரிப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் மாநகராட்சி சார்பில் மின்சார வாரியத்துக்கு மின் கட்டணமாக மாதம் 10 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது இந்த சோலார் அமைக்கப்பட்டு இருப்பதால் வரும் காலத்தில் 10 லட்சம் ரூபாய் ஓவ்வொரு மாதமும் மாநகராட்சிக்கு மிச்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. முக்கிய அரசு அலுவலகத்திற்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் எந்த விதமான குடிநீர் வினியோகம் தாமதம் இருக்காது குறிப்பாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் வழக்கம் போல் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளா் லெனின் இளநிலை பொறியாளர் செல்வம், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா. பகுதி செயலாளர் ரவீந்திரன் வட்டச் செயலாளர் ரவீந்திரன்., கவுன்சிலா்கள் கனகராஜ். முத்துவேல் போல்பேட்டை திமுக பிரதிநிதி பிரபாகர் ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்பட மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு வல்லநாடு ஆற்றுப்படுகையிலிருந்து அங்குள்ள பம்பிங் நிலையத்திலிருந்த குழாய்கள் மூலம் வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு தூத்துக்குடி மாநகரில் உள்ள 60 வார்டு பகுதி மக்களுக்கு 36 குடிநீர் நீர்தேக்க தொட்டி மூலம் சூழற்சி முறையில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வல்லநாடு ஆற்று படுகையில் இருந்து வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் வழியில் மெயின் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டு இருப்பதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் ப்ரியங்காவுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அதிகாலை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் பிரியங்கா மற்றும் மாநகராட்சி 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் முதலில் வல்லநாடு அகரம் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு சென்று அங்கு எவ்வளவு அளவு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட இரண்டாவது குடிநீர் பைப் லைன் பம்பிங் நிலையத்தையும் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார் அப்போது அங்கு இருந்த அதிகாரிகளிடம் பணிகளை விரைவாக ஒரு வார காலத்துக்குள் முழுவதும் முடிக்க வேண்டும் மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் பணிகளை தொடங்கஉள்ளேன். மக்களுக்கு வழங்க வேண்டும் முதல் கட்டமாக அனைத்து வார்டுகளுக்கும் தினசரி குடிநீர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார். அதன் பிறகு வல்லநாடு ஆற்று படுகையில் இருந்து நீர் எடுக்கப்பட்டு வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வழியில் மெயின் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு அருவி போல நீர் வெளியே சென்று கொண்டு இருந்தது அதனைப் பார்த்த மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் பிரியங்கா இவ்வளவு தண்ணீர் வெளியே சென்றால் மாநகர மக்களுக்கு எப்படி குடிநீர் சீராக கிடைக்கும் ஏன் இதனை பல நாள் பார்க்கவில்லை உடனடியாக சரி செய்வதற்கான நடவடிக்கை ஏன் மேற்கொள்ளவில்லை என்று அதிகாரிகளிடம் கேட்டனர் இந்த உடைப்பு எப்படி ஏற்பட்டது ஏதாவது வாகனங்கள் இடித்ததா என்ற விபரங்களையும் கேட்டறிந்தார். இதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் அதன் பிறகு வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்தை முழுவதும் சுற்றி ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அங்கு உள்ள குறைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு கடந்த சில வருடங்களாக வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்தில் சோலார் அமைக்கப்பட்டு வருகிறது அந்தப் பணிகள் தற்போது முடிவடைந்து பயன்படுத்தும் நிலையில் உள்ளது அதனை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டு அறிந்தார். சோலார் மூலம் எவ்வளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்ற விபரங்களையும் அங்கு இருந்த அதிகாரிகளிடம் கேட்டனர்.

அதன் பிறகு மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு வல்லநாடு பகுதியில் இருந்து நான்கு பைப் லைன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது தற்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது பைப் லைன் சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது தற்போது அதனை சரி செய்யும் பணிகள் நிறைவடையும் சூழ்நிலையில் உள்ளது இந்நிலையில் நாலாவது பைப் லைன் மெயின் லைன் உடைப்பு ஏற்பட்டிருப்பது 20 எம்எல்டி தண்ணீர் வரை வீணாக சென்றுள்ளது அதனை எவ்வாறு சரி செய்வது என்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது அதன்படி புதியதாக வாழ்வு மற்றும் பொருட்கள் வாங்கப்பட்டு எல்லா பொருட்களும் சரியான முறையில் சேகரிக்கப்பட்டு பனிமய மாதா கோவில் திருவிழா நடைபெறுவதாலும் பல்வேறு ஆலயங்களில் கோவில் கொடை விழா நடைபெற்று வருவதாலும் 6ம்தேதி வரை குடிநீர் வினியோகம் சீராக விநியோகம் செய்யப்பட்டு வரும்7ம் தேதி குடிநீர் வினியோகம் முழுவதும் நிறுத்தப்பட்டு நாலாவது பைப் லைன் உடைப்பு பணிகள் முழுவதும் 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட்டு அதன் பிறகு மாநகர மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் அதனால் ஏற்படுகின்ற சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் காலதாமதத்திற்கு மக்கள் அமைதியாக இருந்து அதன் பிறகு சீரான குடிநீர் எந்த விதமான தங்கு தடை இன்றி வினியோகம் செய்யப்படும் தூத்துக்குடி மாநகருக்கு 36 டேங்க் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தினசரி குடிநீர் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் அதன்படி தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படும் அதன் பின்பு படிப்படியாக 24 மணி நேர குடிநீர் விநியோகம் என்பது மாநகரில் அமல்படுத்தப்படும். அதுபோல வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்தில் மாநகராட்சி சார்பில் 1.2 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான சோலார் அமைக்கப்பட்டுள்ளது அந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்து ஒத்திகை பார்க்க பட்டு வருகிறது ஒரு நாளைக்கு 4500 முதல் 7200 யூனிட் வரை உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது மாநகராட்சி சார்பில் வல்லநாடு பம்பிங் ஸ்டேஷன் வல்லநாடு சுத்தரிப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் மாநகராட்சி சார்பில் மின்சார வாரியத்துக்கு மின் கட்டணமாக மாதம் 10 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது இந்த சோலார் அமைக்கப்பட்டு இருப்பதால் வரும் காலத்தில் 10 லட்சம் ரூபாய் ஓவ்வொரு மாதமும் மாநகராட்சிக்கு மிச்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. முக்கிய அரசு அலுவலகத்திற்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் எந்த விதமான குடிநீர் வினியோகம் தாமதம் இருக்காது குறிப்பாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் வழக்கம் போல் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளா் லெனின் இளநிலை பொறியாளர் செல்வம், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா. பகுதி செயலாளர் ரவீந்திரன் வட்டச் செயலாளர் ரவீந்திரன்., கவுன்சிலா்கள் கனகராஜ். முத்துவேல் போல்பேட்டை திமுக பிரதிநிதி பிரபாகர் ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்பட மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.
Next Article தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

You Might Also Like

அரசியல்சென்னைதமிழகம்தற்போதைய செய்தி

“திராவிட மாடல் அரசு மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது” – நயினார் நாகேந்திரன் பேச்சு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள்கூட்டத்தில் 485 மனுக்கள் பெறப்பட்டுள்ளது- கலெக்டா் விஷுமகாஜன் தகவல்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளை கற்பழிப்பு பற்றி கேட்டால் பதில் அளிக்க மறுப்பு. ஓய்வூதியதாரர்கள் சங்க ஆா்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

50 ஆண்டு கனவுகளை நிறைவேற்றி வருகிறோம். மாப்பிள்ளையூரணியில் 560 பேருக்கு பட்டா வழங்கி சண்முகையா எம்.எல்.ஏ பேசினாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?