தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைகளையும் நாள்கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திபட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுவேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 485 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டா் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 23 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். தூத்துக்குடி பத்திாிக்கையாளா்களின் நீண்டநாள் கோாிக்கைகளை கேட்டறிந்து பல ஆண்டுகளாகியும் தீர்வு கிடைக்காத நிலை உள்ளது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். என்று பத்திாிகையாளா்கள் கோாிக்கையாக வைக்கின்றனா்.
தொடர்ந்து, மாவட்ட இயக்க மேலாண்மை அலகுசார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட ஊரக / நகர்ப்புற சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகள் என மொத்தம் 09 சமுதாய கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருதுக்கான பாராட்டுச்சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.4,00,000/- பரிசுத் தொகைக்கான காசோலை ஆகியவற்றினை கலெக்டா் விஷுமகாஜன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், தனித் துணைஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் ரமணன், திட்டஇயக்குநர் மகளிர்திட்டம் நாகராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், உதவி ஆட்சியர் பயிற்சி பாட்டீல் கிருஷ்ணாப புருவான், மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.