தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் பணிகளை எடுத்து செய்து வருகின்றனர். இந்நிலையில் மழை காலத்துக்கு முன்பு தூத்துக்குடி மாநகரில் அனைத்து சாலைகளும் 100 சதவீதம் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பொியசாமி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் மாநகராட்சியில் பணிகளை எடுத்து செய்து வரும் ஒப்பந்ததாரர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஒவ்வொரு ஒப்பந்ததாரர்களிடமும் மாநகராட்சி பகுதியில் எடுத்துள்ள பணிகள் நடைபெறாமல் இருக்கும் பணிகள் தாமதம் ஆவதற்கான காரணங்கள் உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார்
அதன் பின்பு மேயர் ஜெகன் ெபாியசாமி கூறுகையில் மாநகராட்சியில் பணிகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள் அனைத்து பணிகளையும் உடனடியாக முடிக்க வேண்டும் மழைக்காலத்துக்கு முன்பு 100 சதவீதம் சாலைகள் போடப்பட்டிருக்க வேண்டும். பேவர் பிளாக் சாலைகள் உடனடியாக ஆரம்பித்து பணிகளை முடிக்க வேண்டும் சிறிய சந்துகள் குறுகிய சாலைகள் பணிகள் எல்லாம் உடனடியாக துவக்கப்பட வேண்டும் எந்த விதமான தாமதம் இன்றி பணிகளை ஆரம்பிக்க வேண்டும். பணிகள் துவக்குவதில் தாமதம் செய்யப்பட்டால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒப்பந்ததாரர்கள் மத்தியில் கூறினார் அப்போது மாநகராட்சியில் பணியில் எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொருவரும் பணிகளை விரைவாக ஆரம்பிக்கப்பட்டு மழை காலத்துக்கு முன்பு பணிகள் எல்லாம் முடிக்கப்படும் என்று கூறினார்கள் ஒரு சில ஒப்பந்ததாரர்கள் பணிகள் தாமதம் ஆவதற்கான காரணத்தை கூறினார்கள் அதன் மீது மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஆணையர் ப்ரியங்கா கூறுகையில் பணிகள் எந்த விதமான தாமதம் இன்றி உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் அதுபோல அதிகாரிகளும் பணிகள் நடைபெறுவதை நூறு சதவீதம் கண்காணிக்க வேண்டும் என்று ஆணையர் பிரியங்கா கூறினார். மொத்தத்தில் மாநகராட்சி நிர்வாகம் மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் நடைபெறுகின்ற பேவர் பிளாக் சாலை தார் சாலை பணிகள் 100சதவீதம் மழை காலத்துக்கு முன்பு பணிகளை முடித்திருக்க வேண்டும் என்று அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கூட்டத்தில் பொறியாளா் திலகா, உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, இளநிலை பொறியாளர்கள் லெனின், செல்வம், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்பட அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.