தூத்துக்குடி ஆலங்குளம் பனைத் தொழிலாளி மணிகண்டன் கடந்த 7.4.26. அன்று உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சேர்ந்து பனைத் தொழிலாளி மணிகண்டனை கள் இறக்கியதாக கூறி துப்பாக்கியால் சுட்டனர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதியரசர் புகழேந்தி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதுபற்றி சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் சிலுவை செய்தியாளர்களிடம் கூறுகையில் மணிகண்டன் தோட்டத்திற்கு சென்று மணிகண்டன் மீது துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டனர். மணிகண்டனின் தந்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். நீதி அரசர் புகழேந்தி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளார் 1987 ஆம் ஆண்டு தமிழக அரசு கள்ளு இறக்குவதற்கு தடை செய்தது. அந்தத் தடையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய பனன தொழிலாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. செயற்கையாக தயாரிக்கக்கூடிய மது விற்பனை செய்யும் போது இயற்கையாக கிடைக்கக்கூடிய கள்ளு ஏன் விற்பனை செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது துப்பாக்கியால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு அரசு சார்பில் இடைக்கால நிவாரணமாக 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். என்ற உத்தரவும் மூன்று வழக்குகள் போடப்பட்டது அந்த மூன்று வழக்குகளையும் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளார். இரண்டு மாத காலமாக மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் நீதிக்காக போராடிக் கொண்டிருந்தார்கள் தற்போது அவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளு உணவு பொருளாகவே உள்ளது. விவசாயிகளின் 40 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி தமிழக அரசு அதை அங்கீகரிக்க வேண்டும். அந்ததீர்ப்பில் பனை மரம் நமது மாநில மரம் அது தமிழா்களின் வரலாறு மற்றம் கலாச்சாரத்துடன் கலந்துள்ளது. தமிழகத்தில் கள் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் தடையை ரத்து செய்ய வேண்டும். நீதிபதி அறிவுரையை தமிழக அரசு ஒருவேளை ஏற்க மறுத்தால் நாங்கள் பனை விவசாயிகள் 10 லட்சம் பேரை ஒன்று திரட்டி பொதுமக்களையும் திரட்டி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் தமிழக முதலமைச்சர் விஜய் இதில் தலையிட்டு உடனடியாக நல்ல தீர்வு காண வேண்டும். தமிழர்கள் மீது பற்று கொண்டவர் ஜோசப் விஜய் என்றால் மருத்துவ செலவிற்கு 10 லட்சம் சேர்த்து பாதிக்கப்பட்ட பனைத் தொழிலாளி மணிகண்டனுக்கு 12 லட்சம் வழங்க வேண்டும் இந்த மாதிரி ஒரு தீர்ப்பு எங்கும் வழங்கப்பட்டதாக இல்லை முதன்முதலாக 40 ஆண்டு காலத்துக்கு பின்பு இப்படி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு நீதிமன்றம் வழங்கி உள்ளது என்று வக்கீல் சிலுவை கூறினார்.
பேட்டியின் போது மணிகண்டன் மனைவி பொன்மணி, வக்கீல் நம்பிராஜன், உள்பட பலா் உடனிருந்தனா்.