தூத்துக்குடி தமிழகத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தில் லாட்டரி சீட்டை முற்றிலும் தடை செய்தார். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் வரை தமிழகத்தில் லாட்டரி சீட்டு என்பது முற்றிலும் விற்பனை கிடையாது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக எப்படியும் லாட்டரி சீட்டு கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சிலா் செயல்பட்டனா். ஆனால் திமுக அதற்கு ஒரு போதும் அனுமதிக்கவில்லை திமுக ஆட்சியிலும் லாட்டரி சீட்டு தமிழகத்தில் எங்கும் செயல்படவில்லை விற்பனைக்கு அனுமதிக்கப்படவில்லை மறைமுகமாக சில இடங்களில் ஆன்லைன் மூலம் மற்றும் கேரளா லாட்டரி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் ஆட்சி அமைந்த பின்பு கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் லாட்டரி விற்பனை கொடி கட்டி பறக்கிறது தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது முன்பெல்லாம் ஆன்லைன் மூலம் தான் லாட்டரி விற்பனை நடைபெற்றது. தற்போது லாட்டரி சீட்டு சா்வ சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காவல்துறையினர் எங்கெல்லாம் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறது என்று தெரிந்திருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதிகளவில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறது என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்ற பொழுது பெயரளவிற்கு யாரையாவது பிடித்து வழக்கு போட்டு விட்டோம் என்று செய்தி கொடுக்கப்படுகிறது. ஆனால் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் லாட்டரி சீட்டு விற்பனை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது தெருவுக்கு 5 பேர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகின்றனா். இதனால் சாதாரண தொழிலாளிகள் தற்போது லாட்டரி சீட்டு அதிக அளவில் வாங்கி வருவதால் தங்களுடைய குடும்பத்தை கவனிக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது அன்றாடம் கிடைக்கக்கூடிய 300 400 ரூபாயை வீடுகளில் கொடுக்காமல் லாட்டரி சீட்டு வாங்கும் நிலைமை தான் தற்போது இருந்து வருகிறது ஆகையால் உடனடியாக தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொடி கட்டி பறக்கும் லாட்டரி சீட்டு விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாகவே உள்ளது குறிப்பாக பெண்களின் கோரிக்கை தான் அதிகமாகவே உள்ளது தற்போது பல்வேறு பெட்டிக்கடைகளில் கூட லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது