தூத்துக்குடி தமிழ்நாட்டில் தொண்டு நிறுவனத்திற்க்கென தனியாக நல வாரியம் அமைக்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், சமூக செயல்பாட்டாளருமான ஜோசப் கென்னடி முதலமைச்சர் விஜய்க்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது
தமிழ்நாட்டில் 18வது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு தூத்துக்குடி மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், சமூக செயல்பாட்டாளருமான ஜோசப் கென்னடி வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதோடு தொண்டு நிறுவனத்திற்கென தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்கள் கட்டண மில்லா மின்சாரம் வழங்கப்படும். பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுவதும் உருவாக்கி இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் குற்றங்களை தடுத்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்கள் மற்றும் 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்கள் என மொத்தம் 65 போதை பொருள் தடுப்பு படை அமைக்கப்படும். என்ற 3 திட்டங்களும் நடைமுறைக்கு வர உள்ளன.
மேலும் கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூட உத்தரவிட்டுள்ளார். மேலும் 21 வயது கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது. விற்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் டாஸ்மாக் பார்களின் இரவு 10 மணிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்தால் அப்பகுதி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக 2 சதவீதம் உயர்த்தி வழங்கியுள்ளார். தமிழகத்தில் 14.23 லட்சம் விவசாயிகள் பயன் அடையும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் குரு விவசாயிகள் பெற்ற ரூபாய் 50 000 பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளார் இதனால் அரசுக்கு ரூபாய் 2.044 கோடி கூடுதல் செலவாகும். ஆனாலும் விவசாயிகளுக்கு பயன் அளிக்கக் கூடிய இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.
இந்நிலையில் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்கின்ற சேவையை தொண்டு நிறுவனங்கள் செய்து வருகிறார்கள். தொண்டு நிறுவனங்களின் மூலம் ஹச்ஐவி / எய்ட்ஸ் மற்றும் தொழுநோய் போன்ற நோய் தாக்கிய நோயாளிகள் மிகுதியாக குறைத்துள்ளது. புதிய நோயாளிகள் உருவாகாமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகம் முதன்மை மாநிலமாக வளர்வதற்கு அரசுடன் இணைந்து தொண்டு நிறுவனங்கள் பல்வேறு சேவை செய்து வருகிறார்கள். தன்னையே அர்ப்பணித்து சேவை செய்து வருகின்ற தொண்டு நிறுவனங்கள் நிர்வாகிகள் பணியாளர்களுக்காக தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும்.
மேலும் அரசை மிக சிறப்பாக வழிநடத்தும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் மேலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ராஜ்மோகன், வன்னி அரசு, ஷாஜகான் உள்ளிட்ட 35 அமைச்சர்களுக்கும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும் தூத்துக்குடி மாவட்ட தொண்டு நிறுவன கூட்டமைப்பு தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும் சமூக செயல்பாட்டாளருமான ஜோசப் கென்னடி வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.