தூத்துக்குடி மேல சண்முகபுரத்தில் முனியசாமி கோவில் இருந்து வந்தது பழமையாக இருந்ததால் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு பழமை மாறாமல் புதியதாக கட்டப்பட்டுள்ள கோவில் மகா கும்பாபிஷேகம் அடுத்த ஜுன் மாதம் 7ம் தேதி ஞாயிறுகிழமை நடைபெறுவதையொட்டி கோவிலில் உள்ள முனியசாமிக்கு குமாா் பட்டா் சிறப்பு பூஜைகளுடன்
நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழித்து வறட்சி நீங்கி, உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், எல்ேலாரும் எல்லா செல்வங்களோடு வாழ வேண்டும். கணவர்கள் ஆயுள் வேண்டியும் குழந்தைகள் படிப்பு ஆரோக்கியம், அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, நோய் நொடி இல்லாமலும், தொழில் வளர்ச்சி எல்லோருக்கும் சிறப்பாக அமைந்து தமிழகம் அமைதி பூங்காவாக அனைவரும் ஓற்றுமையுடன் வாழ்ந்து பொருளாதார நெருக்கடி நீங்கிடவும் முனியசாமி சிவசக்தி அருளாசியுடன் திருப்பணியில் முழுமையாக கலந்து கொண்டும் பங்கெடுத்த அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டி கால்நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கோவில் தா்மகா்த்தா முருகன்நாடாா், தலைவர் விஜயராஜன் நாடாா், துணைத்தலைவா் சண்முகையா நாடாா், பொருளாளா் சீனிவாசன், விழாக்குழு செயலாளா் மதியழகன் நாடாா், கௌரவ ஆலோசகா் சண்முகசுந்தரம், முன்னாள் செயலாளா் அய்யாச்சாமி, திருப்பணி கமிட்டி குழு தலைவர் பாக்கியசெல்வன், செயலாளர் மாடசாமி, பொருளாளா்கள் வெற்றிவேல், முருகேஸ்வரன், கௌரவ ஆலோசகா்கள் வேல்ராஜா காா்த்திக், நடராஜன், காசிராஜன், கணேஷ்ராஜா, கோவில் அர்ச்சகா் கணேசன், உள்பட பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.