தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும் நகர்ப்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்டம், வளர்ச்சி பணிகள் செயல்படுத்தவும் மாநகராட்சிகளில் பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பகுதி சபா கூட்டம் நடத்தப்பட்டு வரப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடப்பு காலாண்டுக்கான பகுதி சபா கூட்டமானது இன்று 15.9.2025 திங்கட்கிழமை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அந்தந்த ஓவ்வொரு வாா்டுகளிலும் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 5 இடங்களில் மொத்தம் 60 வாா்டுகளில் 300 இடங்களில் நடைபெற்றது. அந்த அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 20வது வார்டில் பகுதி சபா உறுப்பினா் கூட்டம் முன்னாள் கவுன்சிலரும் வட்டச்செயலாளருமான ரவிந்திரன், தலைமையில் நடைபெற்றது அதில் பொது மக்கள் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டு பல்வேறு கோாிக்கைகளை நிறைவேற்றினாா்கள். கூட்டத்தில் பகுதி சபா உறுப்பினர் ஐசக், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து வட்டப்பிரதிநிதி அருணகிாி, மற்றும் ராஜா, சிவசுந்தா், உள்பட பலர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி மாநகர பகுதிக்குட்பட்ட 20 வது வார்டில் பகுதி சபா உறுப்பினர் கூட்டம் : முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்டச் செயலாளருமான ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது!!!