தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் எம்.எல்.ஏக்கள் மாா்க்கன்டேயன், கருணாநிதி, மேயா் ஜெகன் பொியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
தலைமை கழக பிரதிநிதிகளான மாநில விவசாய அணி துணைச்செயலாளர் நல்லசேதுபதி, மாணவரணி துணைச்செயலாளர் அமுதரசன், ஆகியோா் கடந்த மாதம் 22ம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மாவட்டத்தில் மேற்காௌ்ளப்பட்ட கழக சீரமைப்பு குழு குறித்து தலைமை கழக பிரதிநிதிகள் எடுத்துரைத்தனா். இதனையடுத்து தூத்துக்குடி கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளில் ஓன்றியங்கள், பகுதிகள், நகரங்கள், பேரூா் கழகங்கள், மறுசீரமைப்பு செய்யப்பட்டதற்கு செயற்குழு உறுப்பினா்களின் ஓப்புதல் பெறப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், அன்புராஜ், செல்வராஜ், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, காசி விஸ்வநாதன், நவநீத கண்ணன், ராதாகிருஷ்ணன், ஜெயகண்ணன், இம்மானுவேல், நகர செயலாளர் ரமேஷ், மாவட்ட அணி அமைப்பாளா்கள் மதியழகன், கவிதாதேவி, அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், வக்கீல் குபோ் இளம்பாிதி, துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், ஜெயக்குமாா், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன் ஜேக்கப், ரவி, அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் பாஸ்கா், மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.