தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் டூவிபுரம் 5வத தெரு மெயின் ரோடு சந்திப்பில் இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி நிர்வாகிகள் தமிழகத்தில் ஆலய தரிசன கட்டணத்தை அரசு தடை செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் வரும் வருமானத்தை இந்து கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்திட வேண்டும். பழனி கோவிலுக்கு சொந்தமான இடத்தை போலிப் பத்திரம் மூலம் பதிவு செய்த குற்றவாளிகள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்து கோவில்களின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் மாயவன் முத்துச்சாமி இந்து முன்னணி மாநகர மாவட்ட துணைத் தலைவர் ஆதிநாத ஆழ்வார், ஜில்லா சங்கச்சாலக் சீதாராமன் பிஜேபி மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன் இந்து அன்னையர் முன்னணி மாநகர் தலைவி உமையவள்ளி இந்து வழக்கறிஞர் முன்னணி இசக்கி லெட்சுமி மத்திய அரசு வழக்கறிஞர் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் சரவணகுமார், பலவேசம், திருப்பதி வெங்கடேஷ், முத்துகிருஷ்ணன், பழனியாண்டி, கோபி, மண்டல தலைவர்கள் சுதாகர், பாலமுருகன் கிளை பொறுப்பாளர்கள் ஆயாம் பொறுப்பாளர்கள் மற்றும் இந்து முன்னணி ஆதரவாளர்கள் உள்பட 80க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்