தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 444வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஓஎல்எஸ் ப்ரண்ட்ஸ் எக்ஸ்போ 2026 பொருட்காட்சி புனித சவேரியானா மைதானத்தில் தொடங்கியது. பொருட்காட்சி திறப்பு விழாவிற்கு பனிமயமாதா பேராலய அருட்தந்தை ஜான் செல்வம் தலைமை வகித்தாா். புனித சவேரியானா அருட்தந்தை சிங்கராயன் முன்னிலை வகித்தாா்.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பொருட்காட்சியை திறந்து வைத்து கூறுகையில் பிரதி பெற்ற பனிமயமாதா கோவில் திருவிழா 10 நாட்கள் தொடா்ந்து நடைபெறவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையும் கடந்து வௌிநாட்டிலிருந்து வருகைதந்து அனைத்து தரப்பினரும் பங்கு பெறும் மிகப்பொிய திருவிழாவாக நடைபெறுகிறது. விழாவிற்கு வருமை தரும் அனைவரும் சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை பல்வேறு பொழுது போக்கு அம்சத்துடன் கூடிய மனதிற்கு மகிழ்ச்சியுடன் குடும்பத்தோடு கொண்டாடும் வகையில் 80க்கும் மேற்பட்ட விளையாட்டு உபயோகத்திற்குடிய ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள், ஆடைகள், உணவக அரங்குகள், சிறுவர் விளையாட்டு அம்சங்கள், பல்வேறு வணிக நிறுவனங்களின் அரங்குகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினாா்.
விழாவில் உதவி பங்குதந்தை ஜெரால்டு, பிரதீபன் லிபோன்ஸ், சவோியான் இணை பொருளாளா் ஜெபஸ்தின் ஜெரால்டு, தலைமை ஆசிாியா் அமல்ராஜ் அமிா்தராஜன் மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், சட்ட ஆலோசகா் செல்வின், ஓஎல்எஸ் பிரண்ட்ஸ் எக்ஸ்போ 2026 பொருட்காட்சி குழு தலைவர் டென்சிங், செயலாளர் அருள், பொருளாளர் நிர்மலா மற்றும் முருகஇசக்கி, ஜேஸ்பா், உள்பட பொருட்காட்சி குழுவினர் பலா் கலந்து கொண்டனர்