தூத்துக்குடி கடம்பூா் பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினா் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
கயத்தாறு அருகே கடம்பூா் பகுதியை சேர்ந்த தொழிலதிபா் ராமசாமி, மதிமுக முன்னாள் கிளைச்செயலாளா் கந்தசாமி, 10வது வாா்டு அதிமுக செயலாளர் சுப்புராஜ், முன்னாள் தேமுதிக கிளைச்செயலாளர் அச்சப்பன், அமமுக கிளைசெயலாளர் சுடலைராஜன், அமமுக மகளிரணி மகாலட்சுமி, சிபிஐ கலாவதி, அதிமுக செல்லத்துரை பாண்டியன், சீனிவாசன், பேரூராட்சி 12வது வாா்டு கவுன்சிலா் முத்துமாாி உள்பட 100க்கும் மேற்பட்டோா் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு கருப்பு சிவப்பு துண்டு அணிவித்து முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வரவேற்றாா்.
அப்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கயத்தாறு ஓன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், பாலக்குமாா், கடம்பூர் பேரூராட்சி தலைவர் நாகராஜா, பேரூராட்சி 9வது வாா்டு கவுன்சிலா் ஜெயராஜ், முருகன், கிருஷ்ணமூர்த்தி, மாியசுந்தரம் மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் ரவி, மற்றும் மணி செந்தில்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்