தூத்துக்குடி திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியா முழுமையும் மாணவர்கள் தங்களின் கல்வி உரிமைக்காகவும், நீட் தேர்வின் குளறுபடிகள் காரணமாக மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். நீட்தோ்வு வினாதாள் வெளியாகி மாணவர்களின் மருத்துவ கல்வியை சீர்குலைத்துள்ளதை கண்டித்து மாணவர்கள் இளைஞர்கள் போராடி வருகிறார்கள் தொடர் போராட்டத்தின் காரணமாக டெல்லியில் சென்னையில் மாணவர்கள் மீது தடியடி பிரயோகம் நடத்தியும் மாணவர்கள் கை கால்கள் உடைக்கப்பட்டாலும் போராட்டத்தை கைவிடாமல் போராடி கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் வாய்திறந்து கண்டிக்கவில்லை மாறாக போராடிய மாணவர்களை வேட்டையாடி வருகிறது கல்வி நிலையங்களில் வகுப்பறையில் சென்று மாணவர்களை கைது செய்ய முயற்சிக்கிறது. போராட்டத்தின் நியாயத்தை உணராமல் மாணவர்களை வாட்டி வதைக்கிறது தவெக விஜய் அரசு. நீட்தேர்வை எதிர்க்கிறாம் என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு போராடிய மாணவர்களை தாக்கியது மட்டுமல்ல போராட்டத்தை நீர்த்து போக செய்யும் பணியை தனது அமைச்சர்களை கொண்டு செய்கிறார் மாணவர் போராட்டத்தை திசை திருப்பி 23-ம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கொண்டாடுங்கள் என அறிக்கை கொடுக்கிறார் 22ம் தேதி இரவு தமிழ்நாடு முழுவதும் திரையரங்கம் முன்பு தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்கள் பாலாபிஷேகம் செய்வதும் 150 ரூபாய் டிக்கெட்டை 1000, 1500 க்கு வாங்கி செல்வதுமான அவலநிலையை காண முடிகிறது. முற்போக்கான மாநிலம் தமிழ்நாடு என்றும் அது உரிமைகளுக்கு முதலாவதாக போராடும் என்ற வரலாற்றை மாற்றி தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்களை தற்குறிகளாக மாற்றும் வேலையை விஜய் அரசு செய்கிறது. வடமாநிலங்களை பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என வசை பாடினோம் அவர்கள் தங்கள் உரிமைக்காக உயிரை பணையம் வைத்து போராடி கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டு இளைஞர்களை திரையரங்க வாசலில் குத்தாட்டம் போட வைக்கிறது இந்த அரசு தூய்மை பணியாளர் போராட்டத்தின் போது முன்னாள் முதல்வர் கூலி படம் பார்க்க போகலாமா? என கேட்ட அன்றைய நடிகர் ஜோசப் விஜய் இன்று முதல்வரானா பின்பு ஜனநாயகன் திரைப்படம் பார்த்து கொண்டிருக்கிறார் தான் கடைசியாக நடித்த படம் வெற்றியடைய அமைச்சர்களை இறக்கி விட்டுள்ளார் ஒரு அமைச்சர் திரைப்படம் பார்க்க விடுமுறை கேட்கிறார் கல்வியில் முன்னணி மாநிலமான தமிழ்நாட்டை விஜய் அரசு கீழ் நோக்கி இழுத்து செல்கிறது. தான் புதியதாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் முந்தைய அரசு திட்டங்களை பெயர் மாற்றம் செய்யும் பணியை மட்டுமே செய்யும் இந்த மைனாரிட்டி குதிரைபேர அரசு தமிழ்நாட்டின் இளைஞர்கள் மாணவர்களை தவறாக வழிநடத்துவதையும், மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக் கழகம் சாா்பில் பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளாா்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் மாணவர்களை தவறாக வழி நடத்துவதா? முதல்வர் விஜய்க்கு தி.வி.க.பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன் கண்டனம்