தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா வரும் 26ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5ம் தேதி நிறைவு பெறுகிறது.
ஆலய முன்புறம் தென் பகுதியில் பல ஆண்டுகளாக சமூக விரோதிகளின் கூடாரமாகவே இருந்து வந்தது பல கட்டங்களாக நடவடிக்கை எடுக்க முயற்சித்த போதும் அது முடியவில்லை இந்நிலையில் பனிமய மாதா ஆலய பங்குத்தந்தை ஜான் செல்வம் மற்றும் பல்வேறு பரதநல அமைப்புகள் மீனவ அமைப்புகள் முழு ஆதரவுடன் கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகத்திற்கு வைத்தனா். உடனடியாக மேயர் ஜெகன் பொியசாமி அந்த இடத்தை பார்வையிட்டு பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் உயா் கோபுர ஹைமாக்ஸ் மின்விளக்குகள் அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார் அதன்படி பல லட்ச ரூபாய் செலவில் மாதா கோவில் முன்புறம் தென்பகுதியில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டது இதற்கு பனிமயமாதா ஆலய பங்கு தந்தை ஜான் செல்வம் ஆலயத்தின் சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் ெபாியசாமிக்கு பங்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கம் சாா்பில் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்து தாங்கள் நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பரதர் நல சங்கம் என்றும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் உங்களின் நல்ல முயற்சிக்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம் யாரும் செய்ய முடியாததை எங்களுக்கு செய்து கொடுத்துள்ளீர்கள் அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர். அப்போது மேயா் ஜெகன் பொியசாமி பாராட்கிடையில் கூறுகையில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு பணியாற்றுவதற்கு தான் நான் உள்பட 60 வாா்டு மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்ெதடுக்கப்பட்டு ஆணையா் அதிகாாிகள் அலுவலா்களோடு இணைந்து அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி பணியாற்றி வருகிறோம். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நன்மைகள் கிடைப்பதற்கு கோாிக்கைகள் வைக்க வேண்டும் அதை பாிசீலனை செய்து நிறைவேற்றி கொடுப்பதற்கு தான் மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் தொடா்ந்து எவ்வித பாரபட்சமின்றி எல்லோருக்கும் நிறைவான பணிகளை குறைவின்றி செய்வோம் என்று மகிழ்ச்சியுடன் பாராட்டுக்கு நன்றி கலந்து கூறினாா்.
நிகழ்ச்சியில் முத்துக்குளித்துறை பரதா்நல சங்கத்தின் அவைத்தலைவர் ஜான்சன் தல்மெய்தா, தலைவா் கனகராஜ், பொதுசெயலாளர் ராஜீ. பொருளாளர் மிக்கேல். பொறுப்பாளர்கள் மெரின்டோ ராயர். செயலாளர்கள் ஜோ, பிச்சையா, துணைத்தலைவா்கள் சுரேஷ், சுசிந்தன், மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.