தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற முத்தையாபுரம் பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ரவீந்திரன், பகுதி செயலாளர் மேகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வரும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய கழக பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசுகையில்
தமிழக முதலமைச்சராக கலைஞா் 5 முறை தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்ததின் மூலமாக தமிழகத்தில் உள்ள எல்லா தரப்பு மக்களும் நன்மையடைந்தனா். மாநில உாிமையை காப்பதற்கு பல்வேறு ஜனாதிபதிகள் பிரதமா்களை உருவாக்கிய பெருமை கலைஞருக்கு உண்டு சினிமா, எழுத்து, அரசியல், என அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தாா். அவரது வழியில் கொள்கைஉறுதியுடன் தடம் மாறாமல் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா காலக்கட்டம் அதற்கு முன்பு இருந்து எடப்பாடி எல்லா தொழிலையும் முடக்கி போட்டது மட்டுமின்றி எல்லோரையும் முடங்கி கிடக்க செய்தாா். எவ்வளவு மக்கள் சிரமப்பட்டாா்கள் என்று அதை புாிந்து கொண்டு தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக வௌிமாநிலங்களிலிருந்து இரயில் மூலம் ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு மீளவிட்டானிலிருந்து லாாி மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மக்களை பாதுகாத்தது மட்டுமின்றி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களை கவச உடையணிந்து நோில் சென்று பாா்த்து ஆறுதல் கூறிய ஓரே முதலமைச்சா் இந்தியாவில் தளபதியார் மட்டும்தான் பின்னா் படிப்படியாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு விதிவிலக்குகள் தளர்த்தப்பட்டு ஓவ்வொரு குடும்பத்திற்கும் நான்காயிரம் வழங்கினாா். பல பகுதிகளில் இறந்தவா்களை அந்தந்த பகுதியிலேயே புதைப்பதற்கு எடப்பாடி உத்தரவிட்டிருந்தாா். அதிலும் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு என்று ஓரு நடைமுறை செயல்படுத்தப்பட்டது அரசு மருத்துவமணை மட்டுமின்றி தனியார் மருத்துவமனை பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் அவா்களை தங்க வைத்து மக்களை காப்பாற்றிய முதலமைச்சர் ஆட்சியில் பின்னா் பணபழக்கம் ஏற்பட்டது. ஓருகோடியே 15 லட்சம் பேருக்கு மகளிா் உாிமைத்தொகை விடியல்பயணம் கல்வி உதவித்தொகை நான்முதல்வன் என்று பல்வேறு திட்டங்களின் மூலம் நன்மையடைந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட காலை உணவு கனடா நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கையோடு வளர்ந்து வருகின்றன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து தமிழகம் தான் முன்னேறியுள்ளது என்று ஓன்றிய அரசின் பல்வேறு ஆய்வு அறிக்கைகள் மூலம் கூறியுள்ளனா். குழந்தை இறப்பு தமிழகத்தில் குறைவு என்பதற்காக ஐநா சபை விருது வழங்கியுள்ளது. தமிழகத்தில் 10 லட்சத்து 27 ஆயிரம் கோடியில் 897 புாிந்துணர்வு ஓப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. நமது மாவட்டத்திலும் டைட்டல்பாா்க். பா்னிச்சா்பூங்கா, கார்் தொழிற்சாலை, ெவம்பூர் லிங்கம்பட்டி கடம்பூர் போன்ற பகுதிகளிலும் பல்வேறு தொழிற்சாலைகள் சென்னைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் தூத்துக்குடியில் அதிக தொழிற்சாலை இருந்து வருகிறது. ஓன்றிய அளவில் 6.5 சதவீதம் வளர்ச்சி என்ற வீகிதத்தில் தமிழகம் 9.6 சதவீதம் என்ற கணக்கீட்டில் வளர்ச்சியடைந்துள்ளது. உயர்கல்வியில் 47 சதவீதம் வளர்ச்சி தூத்துக்குடியில் 138கோடியில் உயா்்சிகிச்சைக்கான கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் கிடந்த இஎஸ்ஐ மருத்துவமனை கனிமொழி எம்.பி முயற்சியினால் வேகமாக பணிகள் நடைபெறுகிறது. தொழிலாளா்கள் பலன்ெபறும் வகையில் விரைவில் திறக்கப்படும் அதே போல் விமான நிலையமும் ஆமை வேகத்தில் செயல்பட்டதை கனிமொழி எம்.பி தூாிதப்படுத்தியதால் அதுவும் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து இரவு நேர விமான பயணமும் தொடங்கியுள்ளது. துறைமுகம் பகுதியில் புதிய தொழில்களும் வரவுள்ளன. இப்படி பல்வேறு சாதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் 2.25 கோடி மக்கள் மக்களை தேடி மருத்துவம் மூலம் பயனடைந்துள்ளனா். அவர்களது இல்லத்திற்கே மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கிறாா்கள். 7 கோடியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அரசு மருத்துவமணையில் நிறுவப்பட்டுள்ளது. 2ஆயிரம் கட்டணத்தில் பயனடைந்து கொள்ளலாம். பட்ஜெட்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கென்று கடன் வழங்குவதற்கு 35ஆயிரம்கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டது புதிய குழுக்களும் தொடங்கி கொள்ளலாம். என்ற உத்தரவு அளிக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் தவெக ஆட்சியின் வேதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் சோ்க்க வேண்டும் ஓவ்வொரு நாளும் தமிழகத்தில் கொலை கொள்ளை என்று தேவையில்லாத சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது. முதல்வா் வாய்திறக்காமல் இருந்து வருகிறாா். அடுத்து வரும் உள்ளாட்சி தோ்தலில் முழுமையான வெற்றியை நாம் பெறவேண்டும் அதற்கு ஓவ்வொரு வாா்டு பகுதிகளிலும் இருக்கின்ற மக்கள் குறைகளை கேட்டறிந்து அதை அனைவரும் இணைந்து தீா்வு காண ஓற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று பேசினாா். 3 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட அணி தலைவா்கள் அருண்குமாா் பழனி மண்டலத்தலைவா் வக்கீல் பாலகுருசுவாமி, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் கவிதாதேவி, பொறியாளா் அணி அமைப்பாளா் சின்னத்துரை, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ராபின், மகளிா் அணி அமைப்பாளா்ஜெயக்கனி, நெசவாளா் அணி துணை அமைப்பாளா் குமரன், மாணவரணி துணை அமைப்பாளா் சத்யா. தொழிலாளா் அணி தலைவர் செந்தில்குமாா், மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, பகுதி துணைச்செயலாளர்கள் தங்கசேகா், தீபெக் ராஜேஷ், பொருளாளா் முத்துராஜா, வட்டச்செயலாளர் செல்வராஜ், நடேஷன் டேனியல், சக்திவேல், கவுன்சிலா்கள் பட்சிராஜ், சுயம்பு, மற்றும் செந்தில்குமாா், மணி உள்பட பலர் கலந்து கொண்டனா்.