தூத்துக்குடி கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில்
கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திபட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்வீடுவேண்டி, தொழில்கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 524 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதுஉரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டா் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில்சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். மேலும், மூத்தகுடி மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக இடத்தில் மூத்தகுடிமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் கோாிக்கை நிறைவேறாமல் உள்ளது அதையும் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கின்றனா்.
தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில் கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதினத்தை முன்னிட்டு முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியினை அனைத்துதுறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
கடந்த திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுஅளித்த நபர்களுக்கு உடனடிதீர்வாக 3 பயனாளிகளுக்கு ரூ.1,72,500/- மதிப்பிலான பட்டாக்கான ஆணைகளை வழங்கினார்.
மேலும். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் 10 குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களுக்கு தொண்டு நிறுவனத்தின் சமூகபொறுப்பு நிதியின் மூலமாக குழந்தைகளின் பயன்பாட்டிற்கு தனிப்பட்ட சுகாதார பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் ரமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் செந்தில்வேல் முருகன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் சந்திரசேகர், மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.