தூத்துக்குடி 1951ல் தூத்துக்குடி மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் எளியவர்களும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும் ஆரம்பிக்கப்பட்டு, பவள விழா கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வ.உ.சி. கல்லூரியின் கடந்த 75 ஆண்டுகால கல்விச் சேவை பயணத்தையும், கல்விப் புரட்சி மற்றும் சமூக மாற்றத்திற்கான வ.உ.சி. கல்லூரியின் பங்களிப்பையும், மாணவ மாணவியரின் வளர்ச்சிக்காக கல்லூரி முன்னெடுத்த திட்டங்களையும் உள்ளடக்கிய புத்தகத்தையும், கல்லூரியின் கடந்த கால நினைவுகளை இக்கால தலைமுறைக்கு ஏற்ற வகையில் கணினித் தரவுகளாக புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய வஉசி டிஜிட்டல் டைாி யையும் சென்னையில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், வ.உ.சி. கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம், கல்வியியல் கல்லூரி செயலாளர் சண்முகம், கல்லூரி முதல்வர் வீரபாகு ஏபிசி மகாலட்சுமி கல்லூரியின் செயலாளர் சுப்புலட்சுமி, வ.உ.சி. கல்லூரி பேராசிரியர்கள் ராதிகா, மீனாட்சிசுந்தரம், பட்சிராஜன், ஜாக்சன், கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் ரோகித் ஆகியோரும் உடன் இருந்தனர்