தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான 1435-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) ஐந்தாவதுநாளாக அனைத்து வட்டங்களிலும் சம்பந்தப்பட்ட வருவாய்த் தீர்வாய அலுவலர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயஅலுவலரும் கலெக்டருமான விஷுமகாஜன் ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கலந்துக் கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
எரல்வட்டம், ஆழ்வார்திருநகரி உள்வட்டத்திற்குட்பட்ட மழவராயநத்தம், ஆதிநாதபுரம், ஆழ்வார்திருநகரி, உடையார்குளம், குறிப்பன்குளம் மற்றும் வெள்ளமடம் ஆகிய கிராமங்களைச் சார்ந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 77 மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும், பெறப்பட்ட மனுக்களை ஆராய்ந்து அதன் மீது உரியநடவடிக்கை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், இதுவரை மொத்தம் 386 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
மேலும், ஜமாபந்தியில் பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடி தீர்வாக இன்றைய தினம் 10பயனாளிகளுக்கு என இதுவரை மொத்தம் 29பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களையும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு விபத்து நிவாரண உதவித்தொகை மற்றும் 03 பயனாளிகளுக்கு திருமணஉதவித்தொகை என மொத்தம்ரூ.4,48,000/- மதிப்பிலான உதவித்தொகைக்கான ஆணைகளை 05 பயனாளிகளுக்கு வருவாய் தீர்வாய அலுவலரும் கலெக்டருமான விஷு மகாஜன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவிஆட்சியர் பயிற்சி பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், அலுவலக மேலாளர் பொது ரகு, ஏரல் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் வருவாய்துறையின் அனைத்துநிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.