தூத்துக்குடியில் கலைஞா் பிறந்தநாளை யொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் ஆணைப்படி, தூத்துக்குடி மாநகர மாணவரணி சார்பில் ஜார்ஜ் ரோடு கீதாஜீவன் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கலைஞர் 103 பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் டைகர் வினோத் தலைமையில் மாநகர துணை அமைப்பாளர்கள் கிங் பாலா, கார்த்திகேயன் முன்னிலையில் கேக் வெட்டி பயிலும் குழந்தைகளுக்கு வழங்கி எழுது பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் மாநகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் சத்யா கந்தசாமி, தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை மற்றும் 36 வார்டு இளைஞர் அணி அமைப்பாளர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.