தமிழ்நாடு சிறு குறு நடுத்தர தொழிலகத்துறை அமைச்சராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட புறநகர் செயலாளராகவும் உள்ள அமைச்சர் மதன்ராஜாவை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு சமூக ஊடகங்கள் வாயிலாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவெக நிர்வாகிகள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி, கருங்குளம், ஓட்டப்பிடாரம் ஆகிய ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 14 க்கும் மேற்பட்ட தவெக ஒன்றிய நிர்வாகிகள் தற்போது இரண்டு மூன்று அணியாகவும், பிற கட்சியினருக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து கட்சியில் சேர்க்கப்படுவதாகவும், பணம் வாங்கிக் கொண்டு கட்சிப் பதவிகள் வழங்கப்படுவதாகவும், கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட நிர்வாகிகளை கண்டுகொள்வதில்லை எனவும் அமைச்சர் மதன்ராஜாவிடம் உள்ள கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை பறிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தின் சமூக வலைத்தள வாட்ஸ் அப்பிற்கு அனுப்பியுள்ள புகாரில் *”அமைச்சர் மதன் அவர்கள் இந்த (ஓட்டப்பிடாரம்) பகுதியில் ஜான்பாண்டியன் கட்சியை சேர்ந்த கிங் தேவேந்திரன் அவர்கள் மூலமாக வசூல் வேட்டையில் இறங்கி உள்ளார்”* எனவும் *”கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் யாரும் தற்போது அவருடன் இல்லை”* என்றும் *” ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்தவர் அல்ல ஆதலால் இங்கே உள்ள நிர்வாகிகளை மதிப்பது இல்லை”* உடனடியாக *”அமைச்சர் மதன்ராஜா வசமுள்ள மாவட்ட செயலாளர் பதவியை வேறொரு நபருக்கு வழங்கிட வேண்டும்”* என்கிற பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் புகார்களை அனுப்பியுள்ளனர்.
தூய்மையான மக்களாட்சியை முன்னிருத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் ஒற்றை தலைமை நிர்வாகத்தை தாண்டி தற்போது *”ஒரு ஆட்டம் ஆடி பார்த்து விடலாம்* என்கிற நோக்கில் மாற்றுக் கட்சியை சேர்ந்த உறவினர் துணையோடு களமிறங்கியுள்ள இத்தகைய கட்சி நிர்வாகி மற்றும் அமைச்சரின் செயல்பாடுகளை உற்று நோக்குவதோடு தமிழக வெற்றிக்கழக தலைமை விரைந்து கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவெக கட்சி நிர்வாகிகள் வேண்டுகோளாக முன்வைக்க தொடங்கியுள்ளனர்.