தூத்துக்குடி அருகே தருவைக்குளம் சொந்த ஊராகவும், தற்போது டுவிபுரம் பத்தாம் நம்பர் தெருவில் வசித்து வந்த திருமதி தேனம்மாள் அவர்கள் (வயது …), லேட் முனியாண்டி நாடார் அவர்களின் மனைவியும், திரு முனியசாமி நாடார், வெற்றிவேல் நாடார், ஜெயராஜ் நாடார் ஆகியோரின் அன்புத் தாயாருமான இவர், இன்று (24.04.2026) மாலை 4.00 மணியளவில் இயற்கை எய்தினார்.
இவரது மறைவு செய்தி உறவினர்கள் மற்றும் பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த தேனம்மாள் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை அனைவரும் பிரார்த்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் மற்றும் அதன் உறுப்பினர்கள், தேனம்மாள் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.