தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஐந்து அலகுகள் உள்ளது ஒவ்வொரு அலகிலும் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது இதில் ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்ட முதல் யூனிட் இரண்டாவது யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை சுமார் 350 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அலகு 3 தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக்கழக ஆட்சி ஏற்பட்ட பின்பு மின்சார அடுப்பு மூலம் டீ போடப்பட்டு வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே அனல் மின் நிலையத்துக்குள் இரண்டு கேண்டீன்கள் உள்ளது. இந்த அலகு 3ல் டீ போட்டு விற்பனை செய்பவர்கள் தொழில்நுட்ப உதவியாளர் பணி செய்து வரும் குமார் மற்றும் மணி உள்பட ஏழு பேர் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் கரண்ட் அடுப்பு மூலம் பல நேரங்களில் டீ போடப்பட்டு அடுப்பை அணைக்காமல் சென்று விடுகின்றனர் இதனால் சில நேரத்தில் கரண்ட் அடுப்பு மீது வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எரிந்துள்ள சூழ்நிலையும் நடந்துள்ளது இதன் மூலம் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது அனல் மின் நிலைய தலைமை பொறியாளராக இருக்கும் எஃப் எக்ஸ் மேரி மேக்டலின் பிரின்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இந்த மின்சார அடுப்பு மூலம் டீ போடும் நபர்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகையால் உடனடியாக தமிழக அரசும் மின்சார துறை அமைச்சரும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அலகு 3ல் இதுபோல நிகழ்வு நடப்பதை உடனடியாக தடுக்க வேண்டும் இல்லை என்றால் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதில் தொழில்நுட்ப உதவியாளராக இருப்பவர்கள் வாரிசு வேலைக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது