தூத்துக்குடி தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் பஜனை மடம் சன்னதி தெரு பெருங்குளத்தில் மாதவையா நூற்றாண்டு நினைவேந்தல் விழா நடைபெற்றது
விழாவிற்கு பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவரும் மருத்துவருமான புவனேஸ்வரி தலைமை வகித்தாா். சீனிவாசன் கண்ணன் ஆறுமுக பாண்டியன் பேச்சிமுத்து வெங்கடாச்சாரி கதிர்வேல் ராமானுஜம் சோலைமலை பாலாஜ கோமதி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் எழுத்தாளர் மணிமொழி செல்வன் வரவேற்புரையாற்றினார்
கணபதி சுப்ரமணியம் வழக்கறிஞர் மணி காசிராஜன் ஓய்வு ஆசிரியர் ஆறுமுகப்பெருமாள் புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோா் அறிமுக உரையாற்றினாா்கள். பேராசிரியர்கள் ராமச்சந்திரன் சத்தியபாலன் இளங்கோமணி முனைவர் மணிமொழி செல்வன் முதல் ஆசிரியர் பாலசுப்ரமணியன் கவிஞர் சாகுல் ஹைக்கூ மற்றும் தன் முனைக் கவிஞர் ஓவியர் வரவுணன் ஆகிய விருது பெற்ற படைப்பாளர்களுக்கு பாராட்டு மற்றும் படைப்பாளுமை விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் ஏரல் ராஜன் நன்றியுரையாற்றினாா்.