கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது; தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு நான்கரை ஆண்டு காலம் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய முன்னாள் முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்தார்.
கடந்த கால ஆட்சியில் ஏழு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் இருந்த நிலையை மாற்றி 38 வார்டுகளில் தினசரி குடிநீர் விநியோக வசதி செய்யப்பட்டுள்ளது. 17 வார்டுகளில் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் கோடை காலத்திலும் சிறந்த முறையில் வழங்கப்படுகிறது. பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. 53 பூங்காக்கள், மகளிர் பூங்காக்கள் சிறப்பாக பராமரிப்பு செய்யப்பட்டும், உடற்பயிற்சி கூட்டத்துடன் கூடிய சிறிய விளையாட்டு திடல்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநகரில் சாலை வசதிகள் முழுமையாக அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பிரதான சாலைகள் மற்றும் அண்ணாநகர், பிரையன்ட் நகர் பகுதியில் எண்ட் டு எண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 60 வார்டுகளிலும் 28,800 தெருவிளக்கு வசதிகள் உள்ளன. இதில் பழுதாகி உள்ள 300 லைட்டுகள் விரைவில் சரி செய்யப்படும் .
தென்மேற்கு பருவமழை காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
கூட்டத்தில் 28 தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டன