தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மருதம் புத்தூர் கிராமத்தில் பனைத் தொழிலாளி மணிகண்டன் என்பவர் கள் இறக்கியதாக சப்-இன்ஸ்பெக்டர் எசக்கி ராஜா சுட்டதில் இரண்டு கால்களிலும் மணிகண்டன் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்ற நீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக புகாரின் அடிப்படையில் மூன்று காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று பனைத் தொழிலாளி குடும்பத்திற்கு நிதி உதவி மற்றும் மருத்துவ சிகிச்சை உதவிகள் செய்யவில்லை என்பதை கண்டித்து பனைத் தொழிலாளி மனைவி கிராமத்தில் உள்ள கோவில் முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறார் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பினர் தென்காசி நோக்கி சென்றனர் அப்போது ஜெயராஜ் சாலையில் காவல்துறையினர் சென்ற காரை தடுத்து நிறுத்தினார் அப்போது சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் சிலுவை மற்றும் அவருடன் சென்ற வழக்கறிஞர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர் இது பற்றி சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் சிலுவை கூறுகையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் மணிகண்டன் என்பவரை ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா சட்ட விரோதமாக காலில் சுட்டதில் படுகாயம் அடைந்துள்ளார் இது தொடர்பாக உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மீது தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு உண்ணாவிரதம் இருப்பதற்காக மணிகண்டன் மனைவி அனுமதி கேட்டபோது காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது இதனை அடுத்து அவரது சொந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து நாங்கள் சென்றபோது காவல்துறையினர் எங்களை தடுத்து உள்ளனர். காவல்துறையினர் ஜனநாயக உரிமையை மீறி எங்களை தடுத்துள்ளது. பனைத் தொழிலாளி மணிகண்டனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தொடர்ந்து போராடுவோம். முதல்வர் விஜய் நாடார் சமுதாயம் இருப்பது தெரியவில்லை என்று நினைக்கிறேன் தமிழகம் முன்னாள் முதலமைச்சரரும் திமுக தலைவர் நாடார் சமுதாயத்திற்கு உரிய பிரதித்துவம் அளித்திருந்தது. பனை வாரியம் அமைத்து அதற்கு ஒரு தலைவரை நியமித்து உறுப்பினர் நியமித்தது முந்தைய திமுக அரசு. அமைச்சரவையில் நாடார் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எங்களது சமுதாயத்தை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் விஜய் புறக்கணித்து வருகிறார் அமைச்சரவையில் உரிய இட ஒதுக்கீடு வழங்காமல் புறக்கணித்து வருகிறார் அமைச்சரவையில் நாடார் சமுதாயத்தை முதல்வர் புறக்கணித்துள்ளார் அதுபோலத்தான் பனைத் தொழிலாளி மணிகண்டன் துப்பாக்கி சூடு உவகாரத்திலும் புறக்கணிக்கிறார் மணிகண்டனுக்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து நாங்கள் போராடுவோம் பல்வேறு சமூக ஆர்வலர்களோடு இணைந்து தொடர்ந்து போராடுவோம் தமிழக முதலமைச்சர் விஜய் எங்களின் கோரிக்கை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று வக்கீல் சிலுவை கூறினார்
தமிழக முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் கடுமையாகும் சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் வக்கீல் சிலுவை பரபரப்பு பேட்டி.