தூத்துக்குடி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 108 இடங்களில் வென்றுள்ளதோடு தற்போது காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து ஆளுங்கட்சியாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் 7 முக்கிய அமைச்சர்கள் முதன்மையாகவும் அதன் பின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரான மதன்ராஜா தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலகத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் அரசு சார்பிலான அமைச்சரின் உதவியாளர்கள் நியமனங்களை ஏற்படுத்தும் பணியில் மும்முரம் காட்டிவரும் நிலையில் ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் மற்றும் தொழிற்நிறுவனங்களுக்கு நிலங்கள் விற்பனை, கனிமவள போக்குவரத்து கனரக வாகன தொழில்களை திருச்செந்தூர் முருகன் டிரான்ஸ்போர்ட் & ரியல் எஸ்டேட் மேற்கொண்டு வரும் புதூர் பாண்டியாபுரம் பகுதியை சேர்ந்த பொன்முருகன் என்பவர் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது தவெக வேட்பாளரான மதன்ராஜாவிற்கு தேர்தல் செலவீனங்களுக்காக ₹5 லட்சம் வழங்கிய நிலையில் தற்போது அமைச்சராகியுள்ள மதன்ராஜாவை சென்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்த ரியல் எஸ்டேட் அதிபரான பொன்முருகன் என்பவர் “தனக்கு வேண்டிய நபரான பொன்னுச்சாமி என்பவரை அரசுத்துறையிலான தங்கள் துறை அமைச்சரின் உதவியாளராக நியமனம் செய்ய வேண்டும்” எனக் கூறி ₹50 லட்சம் வழங்கியுள்ளார்.
அதிமுக, திமுக என கட்சிகள் பல நிலை மாறி கனிம வளம் மற்றும் சட்டவிரோத தனியார் தொழிலக நிலவிற்பனை என பணம் ஈட்டலை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் பொன்முருகன் என்பவரின் பின்னணியில் இருந்து அமைச்சர் மதன்ராஜா இயங்கத் தொடங்கியுள்ளதாக இத்தகைய குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கவனத்தில் கொண்டு ஒரு ஆட்டம் ஆடி பார்த்து விடலாம் என ரியல் எஸ்டேட் மற்றும் கனிமவள கொள்ளையர்களிடம் சிக்கியுள்ள அமைச்சரை கண்காணிக்க கூடுதல் கவனத்தை மேற்கொள்ள வேண்டுமாறு சமூக ஆா்வலா் அக்ாி பரமசிவன் கேட்டுக்கொண்டுள்ளாா்.