பொதுமக்களிடமிருந்து கல்விஉதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திபட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்வீடுவேண்டி, தொழில்கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 40 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கலெக்டா் விஷுமகாஜன் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,01,800/- மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரையும், மேலும், கடந்த வாரம் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைகளையும் நாள் கூட்டத்தில் மனு அளித்த 7 நபர்களுக்கு உடனடி தீர்வாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ்வாங்கும் திறனுகேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தில் 07 பயனாளிகளுக்கு தலா ரூ.9.63 இலட்சம் மதிப்பீட்டிலான குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை கலெக்டா் விஷுமகாஜன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) / மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் செந்தில்வேல்முருகன், உதவிஇயக்குநர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், துணைஆட்சியர் பயிற்சி மகேந்திரன் மற்றும் அனைத்துத் துறைசார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்