தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கன்னியாகுமரி பெருங்கோட்ட அமைப்பு இணைச்செயலாளர் கிருஷ்ணன் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், மாவட்டத்தில் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி வாரியான களநிலவரங்கள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட மக்களின் நலனுக்காக மேற்கொள்ள வேண்டிய மக்கள் நலப் பணிகள் மற்றும் மத்திய அரசின் சாதனைத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், கனல் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாவட்ட துணைத்தலைவர்கள் சிவராமன், வழக்கறிஞர் வாரியர், வழக்கறிஞர் முத்துராமலிங்கம், நவமணிகண்டன், மாவட்ட செயலாளர் சபரிமலை, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா மண்டல தலைவர்கள் சரவணன், மணிகண்டன், மாதவன், சுதா, லிங்கசெல்வம், ராஜேஷ்கனி, சங்கர், செல்வசங்கர், ரதீஸ்குமார், பாப்பா, பேச்சிதுரை, செல்வகுமரன், தங்ககண்ணன் நிா்வாகிகள் காளிராஜா, அர்ஜூன்பாலாஜி, குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.