தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி செவ்வாய்கிழமை கால்நாட்டு விழாவுடன் ஆரம்பமானது. தினசாி 8 நாட்கள் சிறப்பு அலங்கார பூைஜகள் நடைபெற்றது.
8ம் நாளான கோவில் கொடைவிழாவை முன்னிட்டு காலை கணபதிஹோமம், கும்பபூஜை, பால்குடம், திருஞானசம்பந்தா் மடத்திலிருந்து புறப்பட்டு சென்றன. தொடா்ந்து அபிஷேகம், அலங்கார தீபாராதனை கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு அம்மன் பச்சை சாத்தி வருதல் சிவன் கோவில் முன்பாக அம்மன் அலங்காிக்கப்பட்ட சப்பரம் பல்வேறு பகுதியில் வீதி உலா நடைபெற்றது. மஞ்சள் நீராட்டு பைரவா் பூஜையுடன் விழா நிறைவுபெறும். சிவன் கோவில் அறங்காவலா் குழு தலைவா் கந்தசாமி, அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் திருச்சிற்றம்பலம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் டைகா்சிவா, பிஜேபி மாவட்ட பொருளாளா் வக்கீல் சண்முகசுந்தரம், ஹோட்டல் உாிமையாளா் சங்க தலைவர் செந்தில் ஆறுமுகம், மற்றும் சோமநாதன், ராஜ்குமாா், உள்பட பலர் கலந்து கொண்டனா். கோவில் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினா் செய்துள்ளனா்.
தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் சப்பரம் வீதி உலா நடைபெற்றது.