தூத்துக்குடி தமிழ்நாட்டில் 1979ல் திமுக அதிமுக இணைப்பு முயற்சி 2026ல் இணைந்து ஆட்சி அமைக்குமா தமிழகத்தில் எதிா்பாா்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்ற 17வது சட்டமன்ற பொதுத்தோ்தலில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி ஓர் அணியாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமயில் தேசிய ஜனநாயக கூட்டணி ஓர் அணியாகவும் 234 தொகுதிகளில் போட்டியிட்ட சூழ்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையில் 233 தொகுதிகளில் போட்டியிட்டு எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு தொலைகாட்சி சின்னத்தில் ஆதரவளித்து போட்டியிட்ட நிலையில்திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும், தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. யாருக்கும் தனி மெஜாாிட்டி கிடைக்காத நிலையில் விஜய் பல்வேறு கட்சிகளில் ஆதரவை ேகட்கும் நிலையும் உருவாகி அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சில உறுப்பினா்களை தவெகவில் இணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் 7ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்கும் விஜய் சில நாட்களில் தங்களது. ஆட்சியில் மெஜாாிட்டியை நிருப்பிக்கும் காலக்கட்டத்தில் இருந்து வருகிறாா். தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக அதிமுக திராவிட கட்சிகள் ஆட்சி செய்த தமிழகத்தில் மாற்றும் ஏற்பட்டுள்ளதை பலா் விரும்பினாலும் பல்ேவறு தரப்பினா் திமுக அதிமுக இணைந்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் பணியாற்றக்கூடாது. என்ற கேள்வியை எழுப்பி இணையதளம் மற்றும் வாட்சப்களில் பரவலான கருத்துக்கள் தமிழகம் முழுவதும் எதிெராலித்து வருகின்றன. திமுகவில் பொருளாளராக இருந்து பணியாற்றிய எம்.ஜி,ஆா் கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தமிழகத்தில் 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆா் தமிழக சட்டமன்ற ேதா்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைத்தாா் எம்.ஜிஆா் அந்த காலக்கட்டத்தில் இருந்த தாக்கத்தால் இனி தமிழகத்தில் நாம் தாக்கு பிடிக்க முடியுமா என்று நினைத்த திமுக தலைவர் கருணாநிதி திமுகவையும் அதிமுகவையும் இணைக்கலாம் என்ற எண்ணத்திற்கு வந்த காலத்தில் 1979ம் ஆண்டு அதற்கு உதவியாக அப்போது மத்திய அமைச்சராக இருந்த பிஜு பட்நாயக் ஓடிசா மாநில முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக்கின்தந்தை 1979ம் ஆண்டு செப் 12ம் தேதி திமுகவையும் அதிமுகவையும் இணைக்க வைக்கும் ஆலோசனையுடன் சென்னையில் உள்ள கருணாநிதியின் வீட்டில் பிஜு பட்நாயக் சந்திப்பு நிகழ்ந்த மறுநாள் திமுக தலைவர் கருணாநிதியையும் எம்ஜிஆரையும் சேப்பாக்கம் விருந்தினா் மாளிகையில் கூடி சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தாா். அப்போது திமுக பொதுச்செயலாளர் அன்பழகனும் அதிமுகவின் நெடுஞ்செழியன் பன்ரூட்டி ராமசந்திரன் ஆகியோரும் சேப்பாக்கம் விருந்தினா் மாளிகையில் இருந்த அதே நேரத்தில் மற்றொரு அறையில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் நேருக்கு நோ் அமா்ந்திருந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கருணாநிதியின் நிபந்தனைகளான இருகட்சிகளும் இணைந்து திமுக என்ற பெயாில் தான் செயல்பட வேண்டும் அந்த கட்சிக்கு அண்ணா படம் பொறித்த கொடி இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை எம்ஜிஆர் முதல்வா் பதவியில் நீடிக்கட்டும் இரு கட்சிகளும் இணைவது என்பதற்காக திமுகவில் உள்ள எம்.எல்.ஏக்கள் யாருக்கும் அமைச்சா் பதவி எதுவும் தேவையில்லை இணைந்த பிறகு உாிய நேரத்தல் தலைவா் பொதுச்செயலாளர் பொருளாளா் மற்றும் நிா்வாக பொறுப்புகள் குறித்து முடிவு செய்து ெகாள்ளலாம் முக்கியமாக ஆட்சியில் இட ஓதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்கு புறம்பான 9000 ரூபாய் உச்ச வரம்பு ஆணை பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீடு என்பது உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற 6 அம்ச கோாிக்கையை முன் வைத்த நிலையில் இரு தரப்பு நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இரு கட்சியை சேர்ந்த தலைவர்களும் ஓரு அவசர நிா்வாக குழுவை அமைத்து இணைப்பு குறித்த தீா்மானத்தை நிறைவேற்ற முடிவு செய்தனா். இரண்டு கட்சி தலைவர்களும் தேசிய கலந்துரையாடல் என்னவென்று தொியாத நிலையில் அப்போது எல்லோராலும் எதிா்பாக்கப்பட்ட இணைப்பு திட்டம் கடைசி நேரத்தில் நிறைவேறாமல் தோல்வியில் முடிந்தது. தற்போது தமிழகத்தில்யாருக்கும் மெஜாாிட்டி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழகமக்களின் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றிய திமுகவும் அதிமுகவும் இணைந்து சில கொள்கைகளை உருவாக்கி 5 ஆண்டு ஆட்சியை நல்ல திறமையான நிா்வாகத்தோடு நடைபெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் இருகட்சிகளை சேர்ந்த பலரும் தமிழ்நாட்டின் நலன் கருதி விரும்புவதாக கருத்துக்கள் பாிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அரசியலில் நிரந்தர எதிாிகளும் கிடையாது நண்பா்களும் கிடையாது கட்சிக்கான கொள்கைகள் மட்டும் முக்கியம் அதை முன்நிறுத்தி சட்டமன்றத்தில் இணைந்து பணியாற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிா்பாா்க்கும் தமிழக மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினா் முயற்சிகளை மேற்காௌ்வாா்களா பொறுத்திருந்து பாா்ப்போம்
தமிழ்நாட்டில் 1979ல் திமுக அதிமுக இணைப்பு முயற்சி 2026ல் இணைந்து ஆட்சி அமைக்குமா தமிழகத்தில் எதிா்பாா்ப்பு!!!