தூத்துக்குடி கிறிஸ்துமஸை முன்னிட்டு அலங்காிக்கப்பட்ட வாகனங்களில் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலம் நடைபெற்றது. கடற்கரை சாலையில் உள்ள பனிமயமாதா ஆலயம் முன்பிருந்து ெதாடங்கப்பட்ட ஊர்வலத்தை வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த சிறுவனோடு கொடியசைத்து துவக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளா் முருகஇசக்கி, வட்டச்செயலளார் டென்சிங் முன்னாள் தொழிற்சங்க செயலாளர் மாியதாஸ், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர்செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி மாநகரில் கிறிஸ்து பிறப்பை வரவேற்்கும் வகையில் பிரேசில் கனடா மெக்சிகோ அமொிக்கா உள்பட பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுவது போன்ற அலங்கார ஊர்திகளில் பல்வேறு வடிவங்களில் உருவங்களை அமைத்து உற்சாக நடனமாடியபடி அதிரடி இசைமுழக்க இளைஞா்கள் கொண்டாடுவது வழக்கம்.
மாநகரில் லயன் ஸ்டவுன் மரக்குடி மட்டக்கடை பாத்திமாநகா் திரேஸ்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண விளக்குகளால் அமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பு ஊா்வலம் மாநகாில் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. இதில் கப்பல் கிறிஸ்துமஸ் தாத்தா உள்ளிட்ட அலங்காிக்கப்பட்ட வாகனங்களில் கண்னை கவரும் வகையில் மின்விளக்குகள் எாியவிட்டு இன்னிசை ஓலிக்க இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலம் நடைபெற்றது. இந்த வாகன அணி வகுப்பு ஊர்வலம் நகாின் முக்கிய வீதிகள் வழியாக பனிமயமாதா பேராலயம் வந்தடைந்தது. இதை பல்வேறு பகுதிகளில் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனா். ஊா்திகள் ஊா்வலத்தை முன்னிட்ட எஸ்பி பொறுப்பு சிலம்பரசன் டவுன் ஏஎஸ்பி மதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!!