Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு வழங்கும் வீட்டு மனை உடனடியாக வழங்க வலியுறுத்தி பிரஸ் கிளப் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.: முன்னாள் அமைச்சர், மேயர், உள்ளிட்ட பல்வேறு கட்சி முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

Last updated: October 23, 2025 6:33 pm
Tamilagapuratchi
Share
SHARE

œ

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டு மனை வழங்க வலியுறுத்தி பிரஸ் கிளப் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார்.

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் மூத்த உறுப்பினரும் சங்கத்தின் கௌரவ ஆலோசகருமான அருண், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநகர் மாவட்ட தலைவர் சக்தி முருகன், தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை, தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணிச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், பாஜக பிரமுகர் ராஜவேல், வக்கீல்கள் சேகர், மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு தமிழக அரசின் சலுகை விலை வீட்டு மனை நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டு உள்ள நிலையில், தூத்துக்குடி சார்ந்த பத்திரிகை மற்றும் ஊடக துறையினருக்கு கடந்த 30 வருடத்திற்கு மேலாக தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கட்ட மனுக்களை முதலமைச்சர் முதல், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சாமிநாதன் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் கருப்பு உடை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் கலந்து கொண்டு சலுகை விலை வீட்டுமனை விரைந்து வழங்கிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில்: தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றி தர வேண்டும். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் செய்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை அதிமுக சார்பில் விரைவில் நடத்தப்படும் என்று பேசினார்.

இறந்த பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வரும் டிசம்பர் மாதத்திற்குள் மானிய விலையில் வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிக்கையாளர்களை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது வேதனைக்குறியது. மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்தால் மாவட்டம் முழுவதும் பத்திரிக்கையாளர்களை திரட்டி மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பிரஸ் கிளப் கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் லெட்சுமணன், மாரிராஜா, கண்ணன், முத்துராமன், இருதயராஜ், ராஜன், குமார், பிரஸ்கிளப் உறுப்பினர்கள் ரவி, மாரிமுத்து, முரளிகணேஷ், பாலகுமார், அகமதுஜான், அறிவழகன், நீதிராஜன், நடராஜன், கார்த்திகேயன், ஜெயராம், சூர்யா, ராமச்சந்திரன், செய்யது அலி சித்திக், கருப்பசாமி, சந்தனரமேஷ், அருள்ராஜ், மாணிக்கம், பிற சங்கத்தை சார்ந்த குமாரவேல், அண்ணாதுரை, முத்துமாரியப்பன், அல்போன்ஸ், சதீஸ்குமார், ஞானதிரவியம், ராஜேந்திரபூபதி, ரோஜா அருணன், செல்வின், கார்த்திக், சத்யா, சுடலைமணி, கனகராஜ், விஜயகாந்த், பாலசுப்பிரமணியன், மணிராஜ், இமானுவேல் குணசிங், உள்பட ஏராளமான பத்திரிக்கை மற்றும் ஊடக துறையினர் புகைப்பட கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி பிரஸ் கிளப் பொருளாளர் ராஜு நன்றியுரையாற்றினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் புதிய நீர் வழி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் கோரிக்கை!!!
Next Article திமுக ஒன்றிய செயலாளர் இல்லத் திருமணம், அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்எல்ஏ வாழ்த்து!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவை சாதனை விழாவாக மாற்றுவதற்கு அதிக அளவில் பங்குபெற வேண்டும். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 90-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெண்கள் குறித்து இழிவாக பேசுவதா? சி.வி. சண்முகத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கோவில்பட்டியில் வருகிற 28ம் தேதி கலைஞர் வெண்கல முழு திருவுருவச் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?