தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி மூலம் லோன் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அடையாள அட்டை பெற்று வங்கி மூலம் லோன் பெற்ற பெண் ஒருவர் கூறுகையில் முத்துநகர் கடற்கரையில் நான் பாணி பூரி கடை போட்டு உள்ளேன் எனக்கு ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை உள்ளது இந்த வியாபாரம் மூலம் தான் நான் குழந்தைகளை படிக்க வைத்துள்ளேன். எனது மகள் பி டெக் படிக்கிறாள். எனது மகன் மெரைன் காலேஜ் படித்துள்ளான். மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கொடுத்த உதவியும் உற்சாகம் எனக்கு மேயர் தான் கொடுத்தார் நான் பல இடங்களில் கடன் கேட்டேன் வங்கியில் கூட போய் கடன் கேட்டேன் நீங்கள் தொழில் செய்யுங்கள் அதன் பிறகு கடன் தருகிறேன் என்றார்கள் நான் மேயர் ஜெகன் சாரிடம் முத்து நகர் கடற்கரையில் சாலையோர கடை வைக்க அனுமதி கேட்டு எனக்கு அனுமதி கொடுத்தார் இன்று என்னுடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. நான் எனது குடும்பம் எனது இரண்டு குழந்தைகள் இந்த அளவுக்கு உயர்ந்து இருப்பதற்கு எனது இரண்டு குழந்தைகள் உயர்படிப்புக்கு உதவிகரமாக இருந்தது மேயர் தான் காரணம் நாங்கள் ஒருபோதும் இந்த உதவியை மறக்க மாட்டோம் நானும் எனது குடும்பமும் காலம் காலத்துக்கு நன்றி மறக்க மாட்டோம் எப்போதும் அவருக்கு நாங்கள் ஆதரவாகவே விசுவாசமாகவும் காலம் காலத்துக்கு இருப்போம் என வங்கி மூலம் லோன் பெற்ற பெண் கூறினார்.
எனது மகனும் மகளும் உயர் படிப்புக்கு உதவியது மேயர் ஜெகன் பொியசாமி தான். வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். மாநகராட்சி விழாவில் பயனாளி பெண் தகவல்