தூத்துக்குடி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நெல்லை மாவட்டம், மேலப்பாளயத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் அமைதியுடன் வசித்து வரும் நிலையில் எவ்வித சட்டப்பூர்வ அழைப்பாணையோ முறையான காரணமோ இன்றி அப்பகுதி மக்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கண் ரேகை, கைரேகைகளைப் பதிவு செய்வது மனித உரிமையை மீறிய செலாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்தது போன சிறிய இஸ்லாமிய சமுதாய வழக்குகளைக் காரணம் காட்டி, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை மட்டுமே குறிவைத்து இது போன்று பதற்றதை ஏற்படுத்தும் காவல் துறையினரின் இத்தகைய செயல் கண்டிக்க தக்கதாகும். தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இது போன்ற அச்சுறுத்தலும் பதற்றத்தையும் காவல் துறையினர் ஏற்படுத்தி வருவது தொடர்ந்த வண்ணமாக நடை பெறுகின்றன. ஆகவே இஸ்லாமியர்களுக்கு இது போன்று அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் உருவாக்காத வகையில் இருக்க தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் மகேஷ் குமார் அகர்வால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம். எனவே இனி வரும் காலங்களில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் அச்சுறுத்தலும் பதற்றமும் ஏற்படாமல் இருக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
பயோ மெட்ரிக் பதிவு இஸ்லாமியர்களை அச்சுறுத்துகிறதா காவல் துறை காயல் அப்பாஸ் கடும் கண்டனம்