தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் அண்ணா பேருந்து நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பொது சுகாதார வளாகம் மற்றும் பாதுகாப்பு அறை சுமார் 37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது இந்த கட்டிடத்தை மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் திடீரென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் பொது சுகாதார வளாகத்திற்கு நீர் எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது டேங்க் எங்கு உள்ளது என்ற விபரங்களை கேட்டறிந்தார் அப்போது அதிகாரிகள் அளித்த பதிலில் திருப்தி அடையாத மேயர் ஜெகன்பொியசாமி அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கழிப்பறைகளுக்கும் எந்த விதமான தங்கு தடை இன்றி நீர் வழங்க வேண்டும் அதற்காக கூடுதலாக டேங் அமைக்க வேண்டும். என்று கூறினார். மேலும் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலவிநாயகா் கோவில் தெருவில் தூய்மை இந்தியா 2025 2026 திட்டத்தின் கீழ் 13.85 லட்சம் மதிப்பீல் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார வளாகத்தை சில மாற்றங்கள் செய்ய உத்தரவிட்டார். மேலும் அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
அப்போது ஆணையா் ப்ாியங்கா, உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, சுகாதார ஆய்வாளா் ஹாிகணேஷ், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலா் கனகராஜ், வட்டச்செயலாளர் ரவீந்திரன், ஆணையாின் உதவியாளா் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளா் ரமேஷ் உள்பட பலா் உடனிருந்தனா்.
தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு